சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி!

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர்வாரும் பணி விவரம்:

நோக்கம்

+ நீர்ப்பாசன வாய்க்கால்களின் கொள்ளளவை மீட்டுக் கொண்டு வருவதன் மூலம், நீர் செல்லும் திறனை மேம்படுத்துதல்.

+ குறைந்த பராமரிப்புச் செலவுகளில் மேம்படுத்தப்பட்ட பாசன முறைகளை ஏற்படுத்துதல்.

+ பண்ணை அளவில் பாசனநீர் கிடைப்பதை உறுதி செய்தல்.

+ இருப்பில் உள்ள பாசன நீரைச் சரிவிகிதத்தில் விநியோகம் செய்தல்.

நிதி ஆதாரம்

நூறு சதம் மாநில அரசு.

மானியங்களும் சலுகைகளும்

நூறு சதம் மானியம்

திட்டப் பகுதி

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்.

செயல்படுத்தப்படும் பணி

சி மற்றும் டி கால்வாய்களைத் தூர் வாருதல்.

தகுதி

திட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.

அணுக வேண்டிய அலுவலர்

சம்பந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்தில் உள்ள, உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை.


தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!