நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் திட்டம்!

நீர்ச் சேகரிப்பு

நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளைப் பராமரிக்கும் திட்டம்.

நோக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்வடிப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள நீர்ச் சேகரிப்பு கட்டமைப்புகளுக்கு வரும் நீரோட்டத்தை அதிகரித்து, கட்டமைப்புகளில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, தூர்வாரி, அவற்றின் கொள்ளளவைக் கூட்டும் வகையில், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல்.

நிதி ஆதாரம்

தமிழ்நாடு நீர்வடிப் பகுதி வளர்ச்சி முகமை (TAWDEVA) மூலம் பெறப்பட்ட, நீர்வடிப் பகுதி வளர்ச்சி நிதி.

திட்டப் பகுதி

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களைத் தவிர, தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்டங்கள்.

செயல்படுத்தப்படும் பணிகள்

தமிழ்நாடு நீர்வடிப் பகுதி வளர்ச்சி முகமையின் (TAWDEVA) மூலம் ஏற்படுத்தப்பட்ட, நீர்ச் சேகரிப்பு கட்டமைப்புகளை, வேளாண்மைப் பொறியியல் துறையில் உள்ள இயந்திரங்கள் மூலம் பராமரித்தல்.

தகுதி

வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் திட்டம் (DPAP), ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் (IWDP), ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் (IWMP) ஆகிய திட்டங்களில் உள்ள 5010 நீர்வடிப் பகுதிகளில்,

நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை (TAWDEVA) மூலமாக ஏற்படுத்தப்பட்ட, நீர்ச் சேகரிப்பு கட்டமைப்புகளில், பராமரிப்புப் பணிகள், மாவட்ட அளவிலான குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் கட்டமைப்புகளில், மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, அந்தந்த நிதியாண்டில் பணிகளை மேற்கொள்ளுதல்.


தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!