சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்!

சிறப்புப் பகுதி

சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம்.

நோக்கம்

ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை மூலம் சுற்றுச்சூழலை மறு சீரமைத்து, பாதுகாத்து, முழுமையான முறையில், வேளாண் உற்பத்தி திறனைப் பெருக்கி, நீடித்த நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குதல்.

நிதி ஆதாரம்

இது, மாநில அரசுத் திட்டம் என்பதால், இதற்கான நிதி ஆதாரம் மாநில அரசைச் சார்ந்தது ஆகும்.

மானியங்களும் சலுகைகளும்

+ சமுதாய நிலங்களில் 100 சத மானியத்தில் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ளுதல்.

+ தனிப்பட்ட விவசாயிகளின் நிலங்களில், இந்தப் பணிகளை மேற்கொள்ளும் போது, அது, பழங்குடியினர் நிலமாக இருந்தால், 90 சதம் மானியம் வழங்கப்படும்.

+ ஆதி திராவிடர் நிலமாக இருந்தால் 80 சதம் மானியம் வழங்கப்படும்.

+ இதர வகுப்பினர் நிலமாக இருந்தால், 50 சதம் மானியம் வழங்கப்படும்.

திட்டப் பகுதி

உதக மண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் வனப்பகுதிக்கு அருகே உள்ள கிராமங்கள்.

செயல்படுத்தப்படும் பணிகள்

+ கம்பிவலைத் தடுப்பணைகள்.

+ தடுப்பணைகள்.

+ நிலச்சரிவு பாதுகாப்புப் பணிகள்.

+ ஓடைப் பராமரிப்புப் பணிகள்

தகுதி

+ திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகள்.

அணுக வேண்டிய அலுவலர்

+ சம்மந்தப்பட்ட திட்ட மாவட்டங்களில் உள்ள வேளாண்மை உதவி செயற் பொறியாளர், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு அரசு.


தமிழக வேளாண்மைப் பொறியியல் துறை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!