விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

பழமொழி 24
விவசாயப் பழமொழிகள்

ள்ளும் தினையும் எழுபது நாள்!

காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு!

மானம் அதிர்ந்தால் மழை பெய்யும்!

பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை!

தட்டான் பறந்தால் தப்பாமல் மழை பெய்யும்!

அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழை அதிகமாகும்!

பெருமழை பெய்தால் குளிராது!

காரையும் எள்ளையும் கருதிப் பயிரிடு!

ஆயிரம் பயிர் செய்தாலும் அலுத்துப் போகாது செம்மண்!

உழவன் ஓய்ந்து போனால் உழவுத் தடியும் மச்சான் முறை கொண்டாடும்!

விதை முதல் கிடைத்தாலும் வெள்ளாமையை விடாதே!

ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்!

பாடறிந்து பட்டால் பாழாய்ப் போன காடும் விளையும்!

களையெடுக்காத பயிர் கால் பயிர்!

சேர இருந்தால் செடியும் பகையாகும்!

விதை பாதி வேலை பாதி!

பருவத்தில் பயிர் செய்!

பட்டம் தப்பினால் நட்டம்!

அதிர ஓடினால் முதிர விளையும்!

குளம்படி பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்!

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading