கடலை எண்ணெய் உற்பத்தி செயல் விளக்கப் பயிற்சி!

உற்பத்தி WhatsApp Image 2024 03 21 at 17.56.26 78ea5034

நாமக்கல் பிஜிபி வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு மாணவியர், அமுதாராணி, தேவமீனாட்சி, ஹர்ஷினி, கிருத்திகா லெட்சுமி, மோகனாம்பாள், பிரகதி, ஸ்ரீநிதி, சௌந்தர்யா, வைசாலி, பிரியதர்ஷினி ஆகியோர், இராசிபுரம் வட்டாரத்தில், கிராமப்புற விவசாய அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, 12.03.2024 – 16.03.2034 ஆகிய நாட்களில் வடுகம் கிராமத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில்,‌ வைத்தியலிங்கம் அவர்களின் உதவியுடன் நிலக்கடலையில் எண்ணெய் உற்பத்திச் செயல் முறைப் பயிற்சி பெற்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

நிலக்கடலை கொழுப்பு நிறைந்ததாக இருப்பதைத் தவிர, பொதுவான சத்து மதிப்பில், மற்ற பருப்பு வகைகளை ஒத்திருக்கும். கடலையை வேக வைத்து அல்லது வறுத்துச் சாப்பிடுவார்கள். ஆனால், இதன் முக்கியப் பயன் எண்ணெய் ஆகும்.

இது, சமையல் எண்ணெய்யாக அல்லது வெண்ணெய் மற்றும் சோப்பு தயாரிப்பில் பயன்படுகிறது. இரண்டாம் நிலை தயாரிப்பு என்பது, எண்ணெய் எடுத்த பிறகு மீதமுள்ள எச்சம் அல்லது கேக் ஆகும்.

இது, சுத்திகரிக்கப்பட்டு துணைக் கலவையில் பயன்படுகிறது. அராச்சின், கோனாராச்சின் ஆகிய இரண்டும் கடலையின் முக்கியப் புரதங்கள் ஆகும். இதில், லைசின் மற்றும் மெத்தியோனைன் குறைவாக உள்ளது. மேலும், இந்த அமினோ அமிலங்களை, உணவுகளில் சேர்ப்பதன் மூலம் அவற்றின் தரத்தை மேம்படுத்தலாம்.

இந்தியாவில், நிலக்கடலை, கடுகு, குங்குமப்பூ போன்ற எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய்த் தேவை நோக்கில் பயிரிடப்படுகின்றன. இந்த வித்துகள் சுத்தம் செய்யப்பட்டு, இயந்திர அழுத்தி, திருகு அழுத்தி,  கரைப்பான் பிரித்தெடுத்தல் மற்றும் நேரடி கரைப்பான் பிரித்தெடுத்தல் மூலம் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி எங்களுக்குப் புதிய அனுபவமாக இருந்தது என்று கூறினர்.


செய்தி: வேளாண் அனுபவப் பயிற்சி மாணவியர்.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading