நிலக்கடலையில் போரான் பற்றாக்குறை!

நிலக்கடலை 1030048 groundnut scaled

போரான் சத்துப் பற்றாக்குறை உள்ள நிலத்தில் நிலக்கடலையை சாகுபடி செய்து இருந்தால், அது நிலக்கடலை மகசூலைப் பெரியளவில் பாதிக்கும். எனவே, இதைச் சரி செய்வது முக்கியம்.

+ போரான் சத்துக்குறை இருந்தால், நிலக்கடலைச் செடியின் நுனி இலைகள் சிறுத்து, உருமாறி, தடித்து, மொரமொரப்பாக இருக்கும். நடுத்தண்டின் நுனிக் குருத்துக் கருகும்.

+ கடலைக் காய்களின் தோலில் கரும் புள்ளிகள் தோன்றும். பருப்புச் சிறுத்து விடும், பொக்குக் கடலைகள் அதிகமாகும்.

+ பருப்பை உடைத்துப் பார்த்தால், பருப்பின் நடுவில் குழிவான பழுப்பு நிறப் பள்ளங்கள் இருக்கும்.

+ விதையின் கருக்குருத்து பழுப்பு நிறமாக மாறிக் கருகி விடும். இதை, Hollow heart என்று சொல்வார்கள்.

சரி செய்தல்

+ போரான் சத்துக்குறை உள்ள நிலத்தில், எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் வீதம் எடுத்து அடியுரமாக இட வேண்டும்.

+ ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் போராக்ஸ் வீதம் கலந்து, செடிகள் பூக்கும் போதும், காய்கள் பிடிக்கும் போதும், 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.


இயக்குநர், மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.

Share:

விவசாயம் / கால்நடை வளர்ப்புக் குறித்து

சந்தேகமா? கேளுங்கள்!


இன்னும் படியுங்கள்!

Discover more from பச்சை பூமி

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading