My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

எட்டு நாளில் சத்தான பசுந்தீவன உற்பத்தி!

எட்டு நாளில் சத்தான பசுந்தீவன உற்பத்தி!

மக்கள் பெருக்கம், ஆலைகள் பெருக்கம் போன்றவற்றால் விளைநிலப் பரப்புக் குறைந்து வருகிறது. மேலும், மழைக்குறைவு, இடுபொருள்கள் விலையேற்றம், வேலையாட்கள் பற்றாக்குறை, அதிகக்கூலி ஆகியவற்றால், விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், பசுந்தீவன வளர்ப்பில் வந்துள்ள புதிய உத்தியான,…
More...
தீவனமாகப் பயன்படும் அசோலா!

தீவனமாகப் பயன்படும் அசோலா!

அசோலா என்பது, நீரில் மிதக்கும் பெரணி வகைத் தாவரம். இதில், ஏழு வகைகள் இருப்பினும், மைக்ரோ புளோரா என்னும் வகை தான் அதிகளவில் பயன்படுகிறது. வேகமாக வளரும் இது, குறைந்த செலவில் புரதம் நிறைந்த கால்நடை மாற்றுத் தீவனமாக விளங்குகிறது. அசோலா…
More...
தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள்!

தீவனப் பயிர்களை சாகுபடி செய்யும் முறைகள்!

ஊரகப்பகுதி மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பு. ஆடு, மாடு போன்றவற்றில் சிறந்த உற்பத்தியை ஈட்ட வேண்டும் என்றால், அவற்றுக்குச் சரியான அளவில் தீவனத்தைத் தர வேண்டும். பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் அடர் தீவனத்தைப் போதியளவில் தர வேண்டும்.…
More...
சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தி!

சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தி!

விவசாய உற்பத்திப் பொருள்களை நெடுநாட்கள் சேமித்து வைப்பதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட ஈரப்பதம் இருக்கும் வகையில் உலர்த்த வேண்டும். இந்த நடைமுறை, பழங்காலம் முதல் இருந்து வருகிறது. இந்தப் பொருள்கள் அதிக ஈரப்பதம் மிக்கவை என்பதால், இவற்றை உலர்த்த மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிறது.…
More...
பூச்சிகளைக் காட்டிக் கொடுக்கும் ஆமணக்கு!

பூச்சிகளைக் காட்டிக் கொடுக்கும் ஆமணக்கு!

இன்றைய நவீன விவசாயத்தில் நோய்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தான் பயன்படுத்தி வருகிறோம். இதனால், கூடுதல் செலவு, நஞ்சு கலந்த விளைபொருள், சூழல் கேடு போன்ற பக்க விளைவுகளை அனுபவித்து வருகிறோம். இவற்றில் இருந்து மீள்வதற்கு,…
More...
தென்னந் தோப்புக்கு ஏற்ற ஊடுபயிர் கோகோ!

தென்னந் தோப்புக்கு ஏற்ற ஊடுபயிர் கோகோ!

உலகளவில் சாக்லேட் உணவுப் பொருள்கள், சுவையுள்ள குளிர் பானங்கள் மற்றும் மருத்துவப் பொருள்களில் மூலப் பொருளாக, கோகோ பயன்பட்டு வருகிறது. இதன் தேவை ஆண்டுக்கு 15-20 சதவீதம் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இதன் தேவை, உற்பத்தியை விடக் கூடுதலாக இருப்பதால், 60-70…
More...
கோடையிலும் குளிர் காலத்திலும் அசோலா பராமரிப்பு!

கோடையிலும் குளிர் காலத்திலும் அசோலா பராமரிப்பு!

விவசாயத்தில் விளைச்சலைப் பெருக்குவதில், குறிப்பாக, நெல் மகசூலைக் கூட்டுவதில், அசோலா பெரும்பங்கு வகிக்கிறது. இதில், புரதம் மிகுதியாக இருப்பதால், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளின் தீவனமாகவும் பயன்படுகிறது. இதைப் பச்சையாகவும், உலர வைத்தும் தீவனமாகத் தரலாம். மிக எளிதாக அசோலாவை…
More...
மாவைத் தாக்கும் சாம்பல் நோய்!

மாவைத் தாக்கும் சாம்பல் நோய்!

மாவைத் தாக்கும் சாம்பல் நோய், ஆய்டியம் மான்ஜிஃபெரா என்னும் பூசணம் மூலம் உருவாகிறது. அமெரிக்கா, ஜமேய்க்கா, பிரேசில், இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் இந்நோய், இந்தியாவில் மா பயிராகும் எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அனைத்து மா இரகங்களையும் தாக்கும்.…
More...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை, 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம். அதைப் போல மண்வளம் பெருகவும்…
More...
தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

தானியப் பயிர்கள், வறட்சியைத் தாங்கி வளரும் மானாவாரிப் பயிர்கள் ஆகும். தமிழகத்தில், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு, பனிவரகு ஆகியன விளைகின்றன. இவை, மானாவாரிப் பயிர்களாக இருந்தாலும், பருவநிலை மாற்றங்களால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றை, பூசண நோய்கள் தாக்குவதால் பெரியளவில்…
More...
தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னை ஒரு பல்லாண்டுப் பயிராகும். இது, ஒருமுறை பூத்துக் காய்க்கத் தொடங்கி விட்டால், அதன் வாழ்நாள் முழுவதும் மகசூலைத் தந்து கொண்டே இருக்கும். மரத்தின் ஒவ்வொரு ஓலைக்கும் ஒரு தேங்காய்க் குலை வீதம் இருக்கும். ஒரே சமயத்தில் மரத்தில் எல்லா வளர்…
More...
பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைத் தாக்கும் பூச்சி விரட்டிகளைப் பற்றி இங்கே காணலாம். வேப்பிலை: வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்து, 2.5 சதம், 0.6 சதம், 2.0…
More...
தீவனக் கம்பு சாகுபடி!

தீவனக் கம்பு சாகுபடி!

தீவனக் கம்புப் பயிர், சத்தும் சுவையும் மிகுந்தது. இதைப் பசுந்தீவனம், உலர் தீவனம், ஊறுகாய்ப் புல் என, பல வகைகளில், கால்நடைகளுக்குத் தரலாம். பாதியளவில் பூக்கும் நிலையில் இதை அறுவடை செய்தால், 7-10 சதம் கச்சாப் புரதம், 56-64 சதம் நடுநிலை…
More...
எளிய முறையில் பசுந்தீவன உற்பத்தி!

எளிய முறையில் பசுந்தீவன உற்பத்தி!

ஹைட்ரோ போனிக் என்பது, மண்ணே இல்லாமல் நீரை மட்டும் கொண்டு, தட்டுகளில் தீவனத்தை உற்பத்தி செய்வதாகும். இம்முறை மூலம் மிகக் குறைந்த இடத்தில் பசுந் தீவனத்தை உற்பத்தி செய்யலாம். பசுமைக் குடிலில் அடுக்கு முறையில், பிளாஸ்டிக் தட்டுகளில் மக்காச்சோள விதைகளைப் பரப்பி,…
More...
கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகள்!

தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். கரும்பை இருபதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றில் பத்து…
More...
கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்பைத் தாக்கும் நோய்கள்!

கரும்புப் பயிரைப் பலவகை நோய்கள் தாக்குவதால், கரும்பு மகசூலும், சர்க்கரைக் கட்டுமானமும் கணிசமாகக் குறைகின்றன. பூசணக் கிருமிகள் மூலம் உண்டாகும் நோய்களால் கரும்பில் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. விதைக் கரணைகள் மூலம் நோய்கள் அதிகளவில் பரவுகின்றன. இவற்றால் பெரும்பாலும் கரும்பின் தண்டுப்…
More...
துவரையைத் தாக்கும் நோய்கள்!

துவரையைத் தாக்கும் நோய்கள்!

பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் நிறைந்து உள்ளது. எனவே தான், இது சைவ உணவாளர்கள் மற்றும் ஏழை மக்களின் மாமிசம் எனப்படுகிறது. மேலும், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண்வளத்தைக் காப்பதில், பயறுவகைப் பயிர்கள் முக்கியப்…
More...
பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

பத்து யோசனை: பத்து டன் மகசூல்!

நெல், தமிழகத்தின் மிக முக்கிய உணவுப் பயிராகும். ஆயினும் ஆண்டுக்கு ஆண்டு நெல் சாகுபடிப் பரப்புக் குறைந்து கொண்டே வருகிறது. விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவரும் சூழலில், நெல் மகசூலைப் பெருக்கும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு எக்டர் நிலத்தில் பத்து…
More...
கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு சாகுபடியுடன் கன்று வளர்ப்பு!

கரும்பு விவசாயிகள் ஆண்டுக் கணக்கில் காத்திருந்து வருமானத்தை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், பருவமழை பொய்த்தல், வேலையாள் பற்றாக்குறை மற்றும் கரும்புக்கு உரிய விலை கிடைக்காமல் இருத்தல் போன்ற சிக்கல்கள் உள்ளதால், கரும்புத் தோகையைத் தீவனமாகக் கொடுத்து, கன்றுகளை வளர்த்தால்,…
More...