செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பூவாமல் பிஞ்சு தரும் அத்தி ஆயுள் பூத்த ஆவாரைக் காண ஆயுள் விதைமுற்றாக் காய் உண்ண ஆயுள் ஆயுள்தருமே பூவிடாத கீரை உண்ண! அத்தியானது, பெரிய மர வகுப்பைச் சார்ந்த தாவர மூலிகை. சுமார்…
நெல்லிக்காய், இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். எனவே, நீரிழிவு நோயாளிகள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன், சிறிது பாகற்காய்ச் சாற்றைச் சேர்த்துக் கலந்து குடித்து வருவது நல்லது. செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உடலை நலமாக வைத்துக்…
செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். தாவர உணவுகளில் அனைத்துச் சத்துகளையும் கொண்டது முருங்கைக் கீரை. உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த இக்கீரை, சத்துப் பற்றாக்குறை நோய்களைப் போக்க உதவுகிறது. இந்த நோய்களை உணவிலுள்ள சத்துகள் மூலம் சரிப்படுத்துவதே சிறந்த முறை.…
மழைக்காலம். குளிருக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதனால், நோய்களுக்கும் குறைவே இருக்காது. குளிர்காலம் என்பதால், சளி, இருமல் அடிக்கடி உண்டாகும். சுவாசச் சிக்கல் உள்ளோர்க்குச் சொல்லவே வேண்டாம். சளி, இருமலால் மிகவும் பாதிக்கப்படுவர். ஈக்கள் நிறையவே இருக்கும். ஈக்கள் மொய்த்த…
கொய்யாப் பழத்தின் நன்மைகளை நமக்குத் தெரியும். முக்கிய உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் இந்தப் பழத்தில் உள்ளன. ஆனால், கொய்யா இலையும் மருத்துவப் பயனுள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். கொய்யா இலைத் தேநீர், பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும். கொய்யா இலைகளைக் கொண்டு…
கொள்ளு என்னும் கானப்பயறு பயறுவகை உணவுப் பொருளாகும். இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கானப்பயறு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களின் அன்றாட உணவில் இடம் பெற்று வருகிறது. பழங்காலத்தில் குதிரைக்கு உணவாகக் கானப்பயறு இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதிக வேகத்தையும் சக்தியையும் வழங்கி,…
இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் வளரும் கீரைகளில் ஒன்று புளிச்ச கீரை. இதன் புளிப்புச் சுவையால் இப்பெயர் பெற்றது. பச்சைத் தண்டு மற்றும் சிவப்புத் தண்டுப் புளிச்ச கீரை எனவும், வெள்ளைப்பூ மற்றும் சிவப்புப்பூ புளிச்சை கீரை எனவும், செம்புளிச்சை, கரும் புளிச்சை…
செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். நினைவாற்றலைத் தருவதில் வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. இரத்தத்துக்குத் தேவையான சத்துகள் மற்றும் மூளை இயங்கத் தேவையான சத்துகள் இதில் சரியான அளவில் இருப்பதால், இதற்கு, சரஸ்வதி கீரை…
செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்க, குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம்…
பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்; இதயநோய், நீரிழிவு மற்றும் புற்று நோயைத்…
இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தி உள்ளனர். தாவரங்களின் தன்மைக்கு ஏற்ப, அவற்றைப் பல பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளனர். அவற்றில்…
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பயிராகும் மூலிகைகளில் ஒன்று தூதுவளை. இதற்கு, சிங்கவல்லி, அளர்க்கம் என்னும் பெயர்களும் உண்டு. இதன் இலை, பூ, காய், வேர் ஆகிய பாகங்கள், மருத்துவப் பயன்களைக் கொண்டவை. தூதுவளையைச் சுத்தம் செய்து மிளகு, சின்ன வெங்காயம் மற்றும்…
அகத்தி, நமக்கு எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கியமானது. நூறு கிராம் அகத்திக் கீரையில் புரதம் 8.4 கிராம், நார்ச்சத்து 2.2 கிராம், மாவுச்சத்து 11.8 கிராம், கொழுப்புச் சத்து 1.4 கிராம், உயிர்ச் சத்து சி 169 மி.கி., உயிர்ச் சத்து…
எள்ளுப் பொடியைச் சுடுசோற்றில் பிசைந்து சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், இசிவு வலி குணமாகும். வெல்லப்பாகில் எள்ளுருண்டை, கொழுக்கட்டை போன்றவற்றைத் தயாரித்து உண்டால், பிறருக்காக உழைக்கும் மனம் வளரும். அலையும் மனம் அமைதி பெறும். எள்ளையும் வெல்லத்தையும் இடித்து வாயில் வெகுநேரம் வைத்திருந்து…
பொன்னாங் கண்ணியில் நாட்டு இரகம், சீமை இரகம் என உண்டு. இவற்றில் பச்சையாகக் கிடைக்கும் நாட்டுப் பொன்னாங் கண்ணி தான் மருத்துவக் குணங்கள் மிக்கது. பொன்னாங் கண்ணி தூக்கத்தைத் தூண்டும். மத்திய நரம்பு மண்டலத்தைச் சீராக்கிச் சாந்தமாக்கும். பல்வேறு நரம்பு நோய்களைக்…
வில்வ இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை ஆகியன மருத்துவப் பயன் மிக்கவை. துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவை மற்றும் குளிர்ச்சித் தன்மையுள்ள இவை, நோய்களை நீக்கி, உடலைத் தேற்றும் வல்லமை மிக்கவை. மாதவிடாய்க் காலத்தில் அதிகமான இரத்தப் போக்கால் அவதிப்படும் பெண்கள்,…
பழங்கால மருத்துவத்தின் முக்கிய அங்கமாக மூலிகைகள் விளங்கின. அப்போது உருவான இவற்றின் பயன்பாடுகள் இப்போதும் தொடர்கின்றன. இந்திய ஊரகப் பகுதிகளில் ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. அவற்றில் முக்கியமானது ஆவாரஞ் செடி. இதன் பூ முதல் வேர் வரையான அனைத்துப் பாகங்களும்…